கல்விக் கடவுளை அறிந்தவர்கள் காயத்திரியை அறிவாரா ?
கல்விக் கடவுள் சரஸ்வதி தேவி என்பார்கள். வெள்ளைத் தாமரைப் பூவில்
அமர்ந்து, கையில் வீணையுடன் காட்சி தரும் சரஸ்வதி,
பல பெயர்களால் அழைக்கப்படுகிறாள். கலைமகள்,
பனுவலாட்டி, காயத்திரி, ஞானமூர்த்தி, பிராமி, வெள்ளைமெய்யாள், வெண்சலசமுற்றாள், பாரதி, இசைமடந்தை, அயன் மனைவி, வாக்காள், வாணி எனப் பலவாறு விளிக்கப்படுவது வழக்கம். தமிழிலும், சமஸ்கிருத பொழியிலும் அமைந்துள்ள அப்பெயர்களைப் பார்ப்போமா !
-------------------------------------------------------------------------------------
காயத்திரி............................ = கலைமகள்
காயத்திரிதேவி..................=
நாமகள்
சங்கீதா.................................=
இசைமடந்தை
சரசு.........................................=
மலர்மகள்
சரஸ்வதி................................=
பொய்கைப்பூவை
சாரதா....................................=
கலைவாணி
சாரதாதேவி........................=
நாவரசி
ஞானமூர்த்தி.......................=
அறிவழகி
பாரதி.....................................=
கலைமகள்
வாகீஸ்வரி..........................
= நாமகள்
வாணி....................................=
இசைவாணி
வாணிஸ்ரீ..............................=
இசையரசி
வித்யா...................................=
கலைமகள்
வித்யாவதி...........................=
கலைச்செல்வி
வெண்சலசமுற்றாள்......=
தாமரைச்செல்வி
ஸ்ரீவித்யா..............................=
கலையரசி
04. சரசு = பொய்கை, நீரோடை, குளம்; சரசுவதி = பொய்கையில் வாழ்பவள், அதாவது பொய்கையில் உள்ள தாமரைப்பூவில் வாழ்பவள்; = 11. வாணி = வாழ் + ந் + இ = வாழ்ணி = வாணி =( வாழ்பவள், குடிகொண்டவள்; கலைவாணி = கலைகள் தன்னிடம் குடிகொண்டவள்) 13. (வித்தை=கலை) வித்யா = கல்வி, வதி = தன்னிடம் வாழச் செய்பவள்; வித்யாவதி = கல்வி தன்னிடம் வாழச் செய்பவள் 15. வெண்சலசம் = வெள்ளைத் தாமரை.
-----------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை)
14]
{27-04-2022}
---------------------------------------------------------------------------------
![]() |
கலைவாணி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக