பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 25 மே, 2022

பெயர் விளக்கம் (23) சேஷசாயி - பெயரின் பொருள் என்ன ?

சேஷன் என்றால் பாம்பு; பாம்பின் மீது படுத்திருப்பவன் சேஷசாயி !

-----------------------------------------------------------------------------------------

திருமால் பல அவதாரங்கள் எடுத்தவர். பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமாலின் பெயரை ஆண் குழந்தைகளுக்குச் சூட்டுவது மக்களிடையே வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் பெயரின் பொருள் தெரிந்துதான் சூட்டுகிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. 


பெருமாளின் பெயர் தாங்கிய பலருக்கு, அப்பெயரின் பொருள் தெரியாமலேயே இன்னும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.  திருமாலின் பெயர்களில் பெரும்பான்மையானவை சமற்கிருதப் பெயர்களாகவே உள்ளன. மானிடரிடையே வழக்கத்தில் உள்ள திருமால்  பெயர்களையும், அவற்றுக்குப் பொருத்தமான  தமிழ்ப் பெயர்களையும் அறிவோமா !

 

-----------------------------------------------------------------------------------------

      

அச்சுதன்.............................................= மாலவன்

அப்புசாமி (அப்பு=நீர்)................= பொன்னித்துறைவன்

அனந்தசயனம்.....................................= அரவணை நம்பி

கரிவரதன்..............................................= மணிவண்ணன்

காளன் (கருப்பன்)...............................= கார்வண்ணன்

காளமேகன் (திருமால்).......................= முகிலன்

கேசவன் (கேசம்=முடி)........................= மணிமுடி

கோதண்டபாணி (கோதண்டம்=வில்).= வில்லாளன்

சக்கரபாணி..........................................= ஆழியண்ணல்

சாரங்கபாணி.......................................= வில்லாளன்

சாரங்கன் (சாரங்கம்=வில்).................= வில்லாளன்

சுதர்சனன் (சுதர்சனம்=சக்கரம்)..........= ஆழியேந்தல்

சேஷசாயி (சேஷன்=பாம்பு)................= அரவத்துயிலி

சேஷன் (சேஷம்=பாம்பு)......................= அரவண்ணல்

தாமோதரன்(தாமம்=கயிறு).................= மணிவண்ணன்

நந்தபாலன் (நந்தர்=இடையர்)............= இளங்கண்ணன்

நரசிம்மன் (நரன்=மனிதன்).................= அரிமா அண்ணல்

நவநீதன் (நவநீதம்=வெண்ணெய்).....= கார்வண்ணன்

நவநீதகிருஷ்ணன்...................................= மாலன்

நாராயணசாமி.........................................= அலையரசு

நாராயணமூர்த்தி....................................= அலைவாணன்

நாராயணன் (நாரம்=கடல்)...................= கடல்வண்ணன்

நேமிநாதன் (நேமி=சக்கரம்)..................= ஆழியமுதன்

பத்மநாபன் (பத்மம்=தாமரை).............= தாமரைச்செல்வன்

பரந்தாமன்.............................................= திருமால்வளவன்

பார்த்தசாரதி.........................................= அந்திவண்ணன்

பாலாஜி..................................................= திருமலைவாணன்

பெருமாள்= பெருமால்..........................= மாலவன்

மகாவிஷ்ணு (மகா=பெரிய)................= வானவரம்பன்

மதுசூதனன்  (திருமால்)........................= மாயவன்

ரமாபதி (ரமா=இலக்குமி).....................= திருமகள்நம்பி

ரெங்கசாமி (ரெங்கம்=அரங்கம்)..........= அரங்கண்ணல்

ரெங்கநாதன்.........................................= அரங்கண்ணல்

ரெங்கராஜன்.........................................= அரங்கமாலன்

ரெங்கையன்..........................................= மேகவண்ணன்

விஷ்ணு..................................................= பெருமாள்

விஷ்ணுவர்த்தன்...................................= குயிலன்

வேங்கடகிருஷ்ணன்.............................= மலைவாணன்

வேணுகோபால்.....................................= குழலமுதன்

ஸ்ரீதரன்...................................................= தாமரைமணாளன்

ஸ்ரீநிவாசன்............................................= தாமரைவாணன்

ஸ்ரீரங்கன்...............................................= திருவரங்கன்

ஹயக்கிரீவன்........................................= திருமால்


-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 11]

{25-05-2022}

----------------------------------------------------------------------------------------

சேஷசாயி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக