நீலகண்டன் என்னும் சிவபெருமானுக்குப்
பெயர்தான் ஸ்ரீகண்டன் !
சிவபெருமான் பல்வகைப் புராணங்களாலும், இதிகாசங்களாலும் பல்வேறு பெயர்களால்
விளிக்கப்பட்டார். பெரும்பாலும் சமற்கிருதப் பெயர்களாகவே அவை அமைந்தன.
சிவபெருமானின் பெயர்களை ஆண் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழும் போக்கு மக்களிடையே
தோன்றின. பெயர்க் காரணத்தை அறியாமலேயே பெயர் சூட்டும் நிகழ்வுகள் நடந்தேறின. சிவன்
என்பதைக் குறிக்கும் பல்வேறு சமற்கிருதப் பெயர்களையும் அவற்றுக்கு இணையான தமிழ்ப்
பெயர்களையும் பார்ப்போமா !
-------------------------------------------------------------------------------------
அம்பிகாபதி.....................= அழல்வண்ணன்
அர்த்தநாரி..............................=
மங்கைபங்கன்
அர்த்தநாரீஸ்வரன்................= மாதங்கன்
அவிநாசி...........................= கயிலைவாணன்
அவிநாசிலிங்கம்..................= சிவச்செல்வன்
ஆலகண்டன்..........................= நஞ்சுண்டான்
ஆனந்த நடராஜன்................= இன்பக் கூத்தன்
ஈஸ்வரன் (உடையான்)..........= திருச்செல்வன்
ஏகாம்பரம்...............................=
ஆடல்வல்லான்
கங்காதரன்.............................= கங்கைகொண்டான்
கல்யாணசுந்தரன்.................= மணவழகன்
குஞ்சிதபாதம்..........................= கூத்தரசன்
சச்சிதானந்தன்......................= மெய்யறிவின்பன்
சந்திரசூடன்.............................= பிறைசூடி
சந்திரசேகரன்.........................= மதிசூடி
சந்திரமௌலி..........................= பிறைசூடி
சதாசிவன் (நல்லான்)............= அருள்நம்பி
சபாநயகம்...............................= அம்பலவாணன்
சபாநாதன்...............................= தில்லைவாணன்
சபாபதி......................................= மன்றவாணன்
சர்வேஸ்வரன்..........................= பெருந்தேவன்
சாம்பசிவன்.............................= அம்மையப்பன்
சாம்பமூர்த்தி...........................= அம்மையப்பன்
சுந்தரன்......................................= மெய்யழகன்
சுயம்புலிங்கம்..........................= முகிழன்
சோமநாதன்..............................= பிறைசூடி
தட்சிணாமூர்த்தி......................= தென்முகநம்பி
தட்சிணாமூர்த்தி......................= தென்னவன்
நடராஜன்....................................= கூத்தபிரான்
பக்தவத்சலம்............................= அடியார்க்கு நல்லார்
பசுபதி (பசு=உயிர்,
கோ)..........=
கோவேந்தன்
பஞ்சநதன்..................................=
ஐயாறண்ணல்
பஞ்சாட்சரன் (ஐந்தெழுத்தன)...= அம்பலக்கூத்தன்
பரஞ்சோதி.................................= பேரொளி
பரமசிவன்.................................= விண்ணரசு
பரமன்..........................................= தீவண்ணன்
பரமேஸ்வரன்......................= பெருந்தேவன்
பிரஹதீஸ்வரன்........................= பெருவுடையார்
பினாகபாணி.............................= வில்லாளன்
மகாதேவன்................................= பெருந்தேவன்
மஹேஸ்வரன்............................= கோப்பெருந்தேவன்
மாத்ருபூதம்.................................= தாயுமானவன்
மார்க்கசகாயம்..........................= நன்னெறிநம்பி
வன்மீகநாதன்.............................= புற்றுறைநம்பி
வில்வநாதன்................................= வில்வநேயன்
விஸ்வநாதன்...............................= பெருந்தேவன்
விஸ்வலிங்கம்............................= வானவரம்பன்
ஜகதீசன்........................................= உலகநம்பி
ஜகதீஸ்வரன்................................= பார்வேந்தன்
ஸ்ரீகண்டன் ( சிவன் )...................= அந்திவண்ணன்
ஸ்ரீநாத்..........................................= பிறைசூடி
------------------------------------------------------------------------------------
(அம்பிகை = கணவன்) (அர்த்த = பாதி) ) (நாரி = மங்கை) (ஆலம் = நஞ்சு) (ஈஸ்வரன் = உடையவன்) (ஏகாம்பரன் = ஒற்றை உடையன்) (தரன் = அணிந்தவன்) (கல்யாணம் = திருமணம்) (சுந்தரம் = அழகு) (குஞ்சிதம் = தூக்கிய, வளைந்த) (சாம்பவி = அம்மை) (சுயம்பு = தான்தோன்றி) (தட்சிணம் = தெற்கு) . (நடம் = கூத்து) .(பக்தர் = அடியார்) (மார்க்கம்=வழி) (சகாயம் = உதவி) (வன்மீகம் = புற்று) (ஜகம் = பார்)
(ஜகம் = உலகம்)
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ’
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 11]
{26-05-2022}
-------------------------------------------------------------------------------------
![]() |
ஸ்ரீகண்டன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக