[ “ஆ - ஔ” எழுத்தில் தொடங்கும் பெயர்கள் ]
வழக்கத்தில் உள்ள மக்கட் பெயர்களும்
அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப்
பெயர்களும்.
-------------------------------------------------------------------------------
ஆகாஷ்...(ஆகாயம்=வானம்)...= வானவரம்பன்
ஆஞ்சநேயன்..................................= கவியரசு
ஆதவன்.............................................= கதிரவன்
ஆதிசேஷன் (சேஷன்=பாம்பு)...= அரவரசு
ஆதித்தன்...........................................= பகலவன்
ஆதிமூலம் (முதற்காரணம்)......= இறையன்பு
ஆராதனா (வழிபடுதல்)...............= புகழரசி
ஆரோக்யசாமி.................................= நலநம்பி
ஆர்த்தி (விருப்பம்)..........................= விழைமலர்
ஆர்யா (அறிவாளி).........................= அறிவுடைநம்பி
ஆவரணமூர்த்தி(அழிப்பவன்)...= இறைமதி
ஆவுடையப்பன். (சிவன்).............= கோவேந்தன்
ஆனந்தநடராசன்............................= கூத்தரசன்
ஆனந்தபாஷ்யம் (இன்பக்கண்ணீர்) = இன்பவிழி
ஆனந்தம்............................................= பேரின்பம்
ஆனந்தன்..........................................= மகிழ்நன்
ஆனந்தி..............................................= மகிழ்மதி
ஆஷா (ஆஷா=ஆசை).................= அன்பரசி
இந்திரன்............................................= வானரசு
இந்திரா...............................................= விண்ணரசி
இந்து (நிலா).....................................= வெண்மதி
இந்துமதி............................................= நிறைமதி
இமயவல்லி......................................= மலைமகள்
இரணியன் (இரணியம்=
பொன்)= பொற்செல்வன்
இரணியன்........................................= பொன்னழகு
இரத்தினசாமி..................................= மணியரசன்
இரத்தினம்........................................= ஒளிமணி
இரத்தினராஜ்...................................= மணியரசு
இரவி....................................................= கதிரவன்
இரவிக்குமார்...................................= பரிதிச்செல்வன்
இரவிச்சந்திரன்...............................= கதிர்நிலவன்
இராசேந்திரன்.................................= மன்னர்மன்னன்
இராமகிருட்டிணன்........................= எழில்மாலன்
இராமசாமி........................................= எழிலரசு
இராமசுந்தரம் (சுந்தரம்=அழகன்).......= பேரெழிலன்
இராமசேஷன் (சேஷன்=அடிமை)..........= எழிலடியார்
இராமச்சந்திரன்..............................= எழில்நிலவன்
இராமதாஸ்........................................=
எழிலடியார்
இராமமூர்த்தி....................................=
எழில்வேந்தன்.
இராமராஜ்...........................................= எழிலரசு
இராமலிங்கம்....................................=
அழகியநம்பி
இராமன்......(இராமம்=எழில்..).....= எழிலன்
இராஜராஜன்......................................=
மன்னர்மன்னன்
ஈசன்.......................................................= ஏந்தல்
ஈஸ்வரன்..............................................= இறைவன்
ஈஸ்வரன்...............................................= குரிசில்
ஈஸ்வரி...................................................= விண்ணரசி
ஈஸ்வரி...................................................= இறைவி
உதயகுமார்..........................................= இளையநம்பி
உதயபாஸ்கர்......................................= இளங்கதிர்
உதயன்...................................................= இளம்பரிதி
உத்தமன் (சிறந்தவன்)....................= சீராளன்
உத்திராபதி (உத்தரம்=வடக்கு)....= வடலரசு
உமாதேவி..............................................= உமையம்மை
உமாமஹேஸ்வரன்...........................= அம்மையப்பன்
உருக்குமணி.........................................= பொன்மணி
உருத்திரன் (சிவன்)............................= செங்கண்ணன்
உஷா(உஷத்=காலை,)......................= வைகறைச்செல்வி
எல்லப்பன்..............................................= கதிரவன்
எல்லம்பாள் (ஏலம்பாள்)...................= செங்கதிர்ச்செல்வி
ஏகநாதன்.................................................= தனியரசு
ஏகராஜ்......................................................= தனியரசு
ஏகாம்பரன்..............................................=
பனிமலையரசு
ஏகாம்பரன்...............................................= சிவன்
ஏலம்பாள் (எல்லம்பாள்)....................= சுடர்மகள்
ஐராவதம்..................................................=
தேவயானை
ஐஸ்வர்யா................................................= செல்வி
--------------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 11]
{27-07-2022}
-----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக