பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 2 மே, 2022

பெயர் விளக்கம் (14) காங்கேயன் - பெயரின் பொருள் என்ன ?

பொன்னிறத்தவன் என்பதால் முருகன் காங்கேயன் ஆனானோ !

 -------------------------------------------------------------------------------------

நால்வகை நிலங்களுள் ஒன்றான குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த இடங்களும் ஆகும். குறிஞ்சி நிலத் தலைவனாக முருகன் கருதப்பட்டான். பிற்காலத்தில் முருகனின் தோற்றம் பற்றி பல கதைகள் உருவாயின. இதன் தொடர்ச்சியாக முருகனுக்குப் பல பெயர்கள் வழங்கலாயின. காங்கேயம் என்றால் பொன் என்று பொருள். பொன் நிறத்தவன் என்பதால் முருகனுக்கு “காங்கேயன்” என்று பெயர் வந்தது போலும் ! சமஸ்கிருதத்திலும் தமிழிலுமாக வங்கப்படும் முருகனின் பெயர்களையும், அவற்றுக்கு இணையான தமிழ்ப் பெயர்களையும் காண்போமா !

 

 -------------------------------------------------------------------------------------

 

·         கடம்பன்................. = செந்தில் செல்வன்

·         கந்தன்..................... = முருகவேள்

·         காங்கேயன்.......... = பொன்வண்ணன்

·         கார்த்திகேயன்.... = ஆரலழகன்

·         குமரன்.................... = எழில்வாலன்

·         குமார்...................... = சேந்தன்

·         குருசாமி...............  = திருமுருகன்

·         சடாட்சரம்.............. = அறுமொழி

·         சண்முகன்............. = ஆறுமுகன்

·         சண்முகானந்தன் = எழிலின்பன்

·         சரவணன்............... = நாணல் நாடன்

·         சரவணன்.................= பூங்குன்றன்

·         சிங்காரவேலன்... = எழில்முருகு

·         சிலம்பன்................ = குறிஞ்சி வேந்தன்

·         சுப்பிரமணியன்... = தூயமணி

·         சேனாபதி............... = தளபதி

·         தண்டபாணி.......... = செங்கோல்

·         தண்டாயுதபாணி = செங்கோலரசு

·         பழனியப்பன்......... = பொதிகையண்ணல்

·         பழனிச்சாமி.......... = பூங்குன்றன்

·         முத்துக்குமரன்.... = மணியன்

·         முத்துச்சாமி............= மணியரசன்

·         முத்துராஜ்.............. = மணியரசு

·         முருகராஜ்............. = எழிலரசு

·         முருகன்................. = குழகன்; எழிலன்

·         முருகப்பன்........... = எழிற்செம்மல்

·         முருகு..................  = எழில்,

·         முருகேசன்........... = எழிலேந்தல்

·         முருகையன்....... = இளவழகன்

·         விசாகன்................ = தங்கவேலன்

·         வேலுச்சாமி......... = திருமுருகன்

 

-----------------------------------------------------------------------------------

02.(கந்து=தூண்)  05  (குமரன் = இளைஞன்)  08, 09; (ஷட்-சண்=ஆறு)  11, 12; (சரவணம்=நாணல்)  14. (சிலம்பு=மலை) 15.சுப்பிரமணி = (பிராமணருக்கு நல்லவன்= தூயவன்) 17,18; தண்டு = தடி 24-29. (முருகு=அழகு, இளமை)

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 19]

{02-05-2022}

------------------------------------------------------------------------------------

காங்கேயன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக