பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 31 மே, 2022

பெயர் விளக்கம் (30) ஸ்ரீகண்டன் - பெயரின் பொருள் என்ன ?

 சிவபெருமானுக்குப் பெயர்தான் ஸ்ரீகண்டன் !

 --------------------------------------------------------------------------------------

சிவபெருமான்  பல்வகைப் புராணங்களாலும், இதிகாசங்களாலும் பல்வேறு பெயர்களால் விளிக்கப்பட்டார். பெரும்பாலும் சமற்கிருதப் பெயர்களாகவே அவை அமைந்தன. சிவபெருமானின் பெயர்களை ஆண் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழும் போக்கு மக்களிடையே தோன்றின. பெயரின் பொருளை அறியாமலேயே குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன !

 

ஸ்ரீகண்டன் என்றால் சிவன் என்று பொருள். ஸ்ரீ என்னும் சொல்லுக்கு திரு, திருமகள், அழகு, நீலம் என்றெல்லாம் பொருளுண்டு. ஸ்ரீ = நீலம்;  கண்டன் = கழுத்தையுடையவன்; அதாவது நீலகண்டன் என்று பொருள் ; சிவன் என்பதைக் குறிக்கும் பல்வேறு சமற்கிருதப் பெயர்களையும் அவற்றுக்கு இணையான தமிழ்ப் பெயர்களையும் பார்ப்போமா !

-----------------------------------------------------------------------------------------------

  1. அம்பிகாபதி..............................= அழல்வண்ணன்
  2. அர்த்தநாரி.................................= மங்கைபங்கன்
  3. அர்த்தநாரீஸ்வரன்..............= மாதங்கன்
  4. அவிநாசி.............................../....= கயிலைவாணன்
  5. அவிநாசிலிங்கம்..................= சிவச்செல்வன்
  6. ஆலகண்டன்..........................= நஞ்சுண்டான்
  7. ஆனந்த நடராஜன்..............= இன்பக் கூத்தன்
  8. ஈஸ்வரன் (உடையான்).............= திருச்செல்வன்
  9. ஏகாம்பரம்...............................= ஆடல்வல்லான்
  10. கங்காதரன்.............................= கங்கைகொண்டான்
  11. கல்யாணசுந்தரன்...............= மணவழகன்
  12. குஞ்சிதபாதம்.........................= கூத்தரசன்
  13. சச்சிதானந்தன்......................= மெய்யறிவின்பன்
  14. சதாசிவன் (நல்லான்)...............= அருள்நம்பி
  15. சந்திரசூடன்............................= பிறைசூடி
  16. சந்திரசேகரன்.......................= மதிசூடி
  17. சந்திரமௌலி.......................= பிறைசூடி
  18. சபாநாயகம்............................= அம்பலவாணன்
  19. சபாநாதன்...............................= தில்லைவாணன்
  20. சபாபதி......................................= மன்றவாணன்
  21. சர்வேஸ்வரன்.......................= பெருந்தேவன்
  22. சாம்பசிவன்.............................= அம்மையப்பன்
  23. சாம்பமூர்த்தி...........................= அம்மையப்பன்
  24. சுந்தரன்......................................= மெய்யழகன்
  25. சுயம்புலிங்கம்........................= முகிழன்
  26. சோமநாதன்.............................= பிறைசூடி
  27. தட்சிணாமூர்த்தி....................= தென்முகநம்பி
  28. தட்சிணாமூர்த்தி....................= தென்னவன்
  29. நடராஜன்....................................= கூத்தபிரான்
  30. பக்தவத்சலம்...........................= அடியார்க்கு நல்லார்
  31. பசுபதி (பசு=உயிர், கோ).................= கோவேந்தன்
  32. பஞ்சநதன்..................................= ஐயாறண்ணல்
  33. பஞ்சாட்சரன் (ஐந்தெழுத்தன்).....= அம்பலக்கூத்தன்
  34. பரஞ்சோதி.................................= பேரொளி
  35. பரமசிவன்...................................= விண்ணரசு
  36. பரமன்............................................= தீவண்ணன்
  37. பரமேஸ்வரன்...........................= பெருந்தேவன்
  38. பிரஹதீஸ்வரன்........................= பெருவுடையார்
  39. பினாகபாணி...............................= வில்லாளன்
  40. மகாதேவன்..................................= பெருந்தேவன்
  41. மஹேஸ்வரன்...........................= கோப்பெருந்தேவன்
  42. மாத்ருபூதம்..................................= தாயுமானவன்
  43. மார்க்கசகாயம்...........................= நன்னெறிநம்பி
  44. வன்மீகநாதன்.............................= புற்றுறைநம்பி
  45. வில்வநாதன்................................= வில்வநேயன்
  46. விஸ்வநாதன்...............................= பெருந்தேவன்
  47. விஸ்வலிங்கம்............................= வானவரம்பன்
  48. ஜகதீசன்...........................................= உலகநம்பி
  49. ஜகதீஸ்வரன்.................................= பார்வேந்தன்
  50. ஸ்ரீகண்டன் ( சிவன் ).......................= அந்திவண்ணன்
  51. ஸ்ரீநாத்................................................= பிறைசூடி

---------------------------------------------------------------------------------------

(01)(அம்பிகை = கணவன்)   (02)(அர்த்த = பாதி) (நாரி = மங்கை) (04) அவிநாசி = சிவன்;    (06)(ஆலம் = நஞ்சு)  (08)(ஈஸ்வரன் = உடையவன்)  (09)(ஏகாம்பரன் = ஒற்றை உடை அணிந்தவன்)  (10)(தரன் = அணிந்தவன்)  (11)(கல்யாணம் = திருமணம்)   (சுந்தரம் = அழகு)   (12)(குஞ்சிதம் = தூக்கிய, வளைந்த) (17) மௌளி = முடி; (18)(சபா = அம்பலம்;   (22)(சாம்பவி = அம்மை)   (25)(சுயம்பு = தான்தோன்றி) (26) (சோமம் = நிலவு;  (28)(தட்சிணம் = தெற்கு)  .(29)(நடம் = கூத்து)  (30.(பக்தர் = அடியார்) (39)(பினாகம் = வில்) (42)(மாத்ரு = தாய்)    (43)(மார்க்கம்=வழி) (சகாயம் = உதவி)   (44)(வன்மீகம் = புற்று) (46)(விஸ்வம் = பெரிய) (48)(ஜகம் = உலகம்) (51) (நாத்= நாதன் = தலைவன், சிவன்)            

 

---------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 (vedarethinam70@gmail.com)

 ஆட்சியர்,

 தமிழ்ப் பெயர்வலைப்பூ

 [திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]

 {31-05-2022}

---------------------------------------------------------------------------------------

ஸ்ரீநாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக